பெரியகுளம் பாலு இராமச்சந்திரன்

என் வீட்டுத் தோட்டத்தின் எழில் மலர்கள் !

வெள்ளி, 14 பிப்ரவரி, 2020

நம்மில் ஏன் ஒற்றுமை இல்லை ?

நம்மில் ஏன் ஒற்றுமை இல்லை ?



-------------------------------------------------------------------------------------------------------------------------------------------


நம் இல்லத்தில் உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை இன்றிப் போனது ! இதன் தொடக்கமே உறவினர்களிடம் பகைமை உணர்வும் தொடர்ந்து விடுகிறது !
விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கின்றி பழிவாங்கும் படலம் ஒவ்வொருவரிடத்தும் நிலைக்கிறது !


ஆனால் புதிதாகப் பழகும் ஆளினர்கள் தன் இல்லத்தே வந்துவிட்டால் போதும், அவர்களுக்குச் செய்யும் பணியினைப் பார்க்கும் உடன்பிறந்தவர்களின் மனதில் இன்னும் விரிசல்தான் !


இதுகூட ஒரு வகையில் திருமணத்திற்கு முன் உள்ள காதல், மணவாழ்க்கைக்குப் பின் இல்லாமல் துன்பத்திற்கு உட்பட்டது போல்தான் எனலாம் !

கிழிந்த ஆடைகளை இணைப்பது நூல் ஆகும் ! அந்நூலின் இருபக்க முனைகளை இணையர்கள் எதிரெதிர் பக்கம் இழுப்பதாக வைத்துக்கொள்வோம் ! நூல் என்னவாகும் ? அறுந்துவிடும் அல்லவா !


மாறாக, இணையரில் ஒருவர் தம் பக்கம் நூலை இழுக்கையில், இன்னொருவர் இழுப்பவரின் முன்னரே சென்றால் நூல் அறுபடுமா ? அறுபடாதுதானே !

அதுபோல, வாழ்க்கை என்பது, இல்லத்தின் தாத்தா, பாட்டி, கணவன், மனைவி, அண்ணன், தம்பி,அக்காள், தங்கை, மாமா மாமி, சித்தப்பா, பெரியப்பா, பெயரன், பெயர்த்தி, என விட்டுக்கொடுத்துச் சென்றால் இல்லம் சிறக்கும் !

இதுதான், "இல்லறமே நல்லறம்"!


ஆனால் இன்றோ, பண்பாடு நிறைந்த நம்நாட்டில் இவைகளெல்லாம் தலைகீழாக உள்ளது !

தமிழ்மொழி மூலமாக சிறந்து விளங்கிய ஒற்றுமை வேற்றுமொழிகளால் பிரிந்து கிடக்கிறது !


தமிழ் பேசினால் தரம் குறைவு என்று எண்ணுகிறார்கள் !
ஆங்கிலமும் இந்தியும் இன்னபிற மொழிகள் பேசினால் உயர்வு என்று நினைக்கிறார்கள் !


ஆதலாலே, இன்று தமிழனுக்குத் தமிழன் எதிரியானான் ! வேற்றவனுக்குக்கூட மடிமையாகி அவன் என்ன சொன்னாலும் செய்வதற்கு தயாராக இருக்கிறான் !


வீட்டை மறந்து, இனத்தை மறந்து, பகட்டிற்கு மயங்கி உரிமையை விட்டுக் கொடுக்கிறான் !


இதில் "இராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லை" என்று வெட்கமில்லாமல் பாடல்களைப் படித்துத் திரிகிறோம் !


உன் வீட்டின் நடவடிக்கைகளை உன் வீட்டினர்தான் தீர்மானிக்க வேண்டும் !

சிந்தித்துப் பார்த்து செய்கையை மாற்று

சிறிதாய் இருக்கையில் திருத்திக் கொள் !

------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் & இடுகை

பாலு இராமச்சந்திரன்.
(baluramachandra83@gmail.com0
தமிழ்ப் பணிமன்றம்
[தி.ஆ.2051கும்பம்(மாசி)01.
{13-02-2020}

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக