பெரியகுளம் பாலு இராமச்சந்திரன்

என் வீட்டுத் தோட்டத்தின் எழில் மலர்கள் !

ஞாயிறு, 15 மார்ச், 2020

எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை !!

எந்நோய்க்கும் உய்வுண்டாம், உய்வில்லை இந்நோய்க்கு !!

----------------------------------------------------------------------------------------

புதுக்குறளில் “கொரோனா” !



எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
இந்நோய்க்கு இன்றே உணர்.

தொட்டனைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு
கட்டியணைத்து பரவும் தவிர்.

கைகூப்பிக் கரம் சேர்த்து வணங்குதல் நன்று
மெய் கூப்பி வள௫ம் வாழ்வு

துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை
துப்புபவர்கள் துப்பாமை நன்று.

இ௫மலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும்
இ௫ப்பது அறிகுறியென உணர்.

கூட்டம் கும்பலில் சேராமல் இ௫ப்பது
சாலச் சிறந்ததாம் இந்நாளில்.

கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று
காத்திடும் நோயிலின்று உன்னை.

கடல்கடந்து வந்தாலே கடமையே உன்
உடல் பரிசோதிப்பது நன்று.

ம௫ந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை
மாற்றம் காண்பது நன்று.

கைகொண்டு புறம் தொட வேண்டாம் கழுவிய பின்
மெய் தொடுதல் நன்று.

-----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை

பாலு இராமச்சந்திரன்
(baluramachandra83@gmail.com)
ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்
தமிழ்ப் பணிமன்றம்
[தி.பி.2051,கும்பம் (மாசி) 28]
{1/03/2020}
-----------------------------------------------------------------------------------------

மதிப்பிற்குரிய “கொரோனா”வே வருக ! !

மதிப்பிற்குரிய ''கொரானாவே'' வருக..!!

--------------------------------------------------------------------------------------------------------------------------


மதிப்பிற்குரிய ''கொரானாவே'' வருக..!!
இந்தியர்களின்
உயிர் வேண்டுமா உனக்கு...
வரிசையில் நில்..
கண்ணுக்கு முன்னே...
துப்பாக்கி ஏந்தி கலவரம் செய்யும் கொலைகாரனையோ..
கடைகளுக்கு நெருப்பு வைக்கும் கொள்ளைக்காரனையோ..
பெண்களை வல்லுறவில் கொள்ளும் பயங்கரவாதிகளையோ..
தடுக்காத தேசம் ..
கண்ணுக்கு தெரியாத உன்னை மட்டும்,
தடுக்கவா போகிறது...?
கொரானாவே' வரிசையில் நில்..!
மதங்களுக்காகவும்.. ஜாதிகளுக்காகவும்..
மக்கள் கொல்லப்படுவார்கள்..
கனிம வளங்களுக்காக.. பழங்குடிகள் கொல்லப்படுவார்கள்..
கல்வி நிலையங்களில் மாணவர்கள் கொல்லப்படுவார்கள்..
அரசியல் வாதிகளுக்காக தொண்டர்கள். கொல்லப்படுவார்கள்..
கூலி உயர்வு கேட்ட தொழிலாளிகள் கொல்லப்படுவார்கள்..
விலை பொருளுக்கு விலையில்லாமல்..
விவசாயிகள் கொல்லப்படுவார்கள்..
வட்டிக்கட்ட முடியாத வறியவர்கள் கொல்லப்படுவார்கள்...
சிகிச்சைக்கு பணமில்லாமல் நோயாளிகள் கொல்லப்படுவார்கள்..
தரமற்ற சாலைகளால்.. பயணிகள் கொல்லப்படுவார்கள்..
வரதட்சணை கொடுக்காத கன்னியர்கள் . கொல்லப்படுவார்கள்..
கள்ளிப்பால் கொடுத்து சிசுக்கள் கொல்லப்படுவார்கள்...
மலக்குழிகளுக்குள் இறங்கிய மானிடர்கள்..கொல்லப்படுவார்கள்..
உரிமைக்காக குரல் கொடுக்கும் உத்தமர்கள்... கொல்லப்படுவார்கள்...
இதற்க்கு பிறகும் மிச்சம் இருந்தால்..
நீயும் கொல்..
அதுவரை.. வரிசையில் நில்...!!


--------------------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை

பாலு இராமச்சந்திரன்
தமிழ்ப் பணிமன்றம்
(baluramachandra83@gmail.com)
[தி.பி.2051,மீனம்(பங்குனி) 01]
{14/03/2020.}
--------------------------------------------------------------------------------------------------------------------------